ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை வெற்றி : 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது
Oct 29 2020 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஜோஸ் பிலிப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9 ரன்களும், டி வில்லியர்ஸ் 15 ரன்களும், ஷிவம் துபே 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. வ்தத் படிக்கல் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக்18 மற்றும் இஷான் கிஷன் 25 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. எனினும் நிலைத்து நின்று விளையாடிய சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியாக 19 புள்ளி 1 ஓவர்களில் 166 ரன்களை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.