போர்ச்சுக்கல் நாட்டில் அடுக்குமாடிக் கட்டட உயரத்திற்கு எழுந்த அலைகள் - பயிற்சியில் ஈடுபட்ட அலைச்சறுக்கு வீரர்கள்
Oct 30 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போர்ச்சுக்கல் நாட்டில் பேரலைப் பருவம் தொடங்கியதால், அலைச்சறுக்கு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டின் Nazare கடற்கரை, மிக அதிக உயரத்தில் கடல் அலைகள் உருவாகும் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வரும் திங்கள் கிழமையன்று இந்த கடற்கரையில் உலக அளவிலான அலைச்சறுக்குப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்கான பயிற்சியில் பங்கேற்ற வீரர்கள் பனை மரத்தின் உயரத்துக்கும் மேல் எழுந்த அலைகளுக்கு இடையே அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட காட்சிகள், காண்போருக்கு பரவசமூட்டின.