இராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை
Nov 9 2020 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இராஜபாளையம் தனியார் கிளப் சார்பில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வத்திராயிருப்பு பள்ளி மாணவன் டால்வின் ராஜ் என்பவர், 3 அடி உயரத்திற்கு செங்கலை அடுக்கி, அதன்மீது ஒற்றைக் காலில் நின்றபடி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை, 1 மணி 30 நிமிடங்கள் செய்து சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒரு மணி நேரம் செய்த சாதனையை, டால்வின் ராஜ் தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனையை குளோபல் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி திரு. நிர்மல் குமார் மற்றும் கலைமாமணி திரு. சுந்தரவேல், திரு. தனலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு உலக சாதனை புக்கில் பதிவு செய்தனர்.