மாரடோனா உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி : அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
Nov 27 2020 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவின் உடல், உறவினர்களின் முன்னிலையில் தனியார் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா, மாரடைப்பு காரணமாக காலமானார். பின்னர் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரது உடல் ப்யூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள தனியார் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கும் அதிகமான தொலைவு வரை வரிசையில் நின்று லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.