சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
Nov 29 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி, அதே சிட்னி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆரோன் ஃபிஞ்ச் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த நிலையில், வார்னர், லேபுசேன், மாக்ஸ்வெல் ஆகியோர் அரை சதம் அடித்ததால், ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்களை குவித்தது. இதையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் கோலி அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 76 ரன்களைச் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.