மாரடோனா மரணத்துக்குக் காரணம் மாரடைப்பா? : உயிரிழப்பு குறித்து விசாரிக்க அர்ஜென்டினா நீதித்துறை உத்தரவு
Nov 30 2020 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாரடோனா உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா மாரடைப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது ஆம்புலன்ஸ் வருவதற்கு அரை மணிநேரம் ஆனது ஏன் என்ற கேள்வி எழுந்தது. அது மட்டுமின்றி அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், மாரடோனாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. மாரடோனாவின் தனிப்பட்ட மருத்துவரிடம் தீவிர விசாரணை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.