பஹ்ரைன் நாட்டில் பந்தயச் சாலையை விட்டு விலகி சுவற்றில் மோதிய கார் - தீ பற்றிய காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்
Nov 30 2020 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக சுவற்றில் மோதி தீ பற்றிய காரிலிருந்த வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரென்ஞ் வீரர் Romain Grosjean, தமது காரை அதிவேகமாகச் செலுத்திய போது எதிர்பாரத விதமாக பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி தீ பற்றியது. அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களும், மருத்துவர்களும் உடனடியாக அங்கே சென்று தீயை அணைக்கும் முயற்சியிலும், அவரைக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கினர். இதில் எந்த வித காயங்களும் இன்றி Romain Grosjean அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.