ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - முதல் விக்கெட்டை கைப்பற்றினார் தமிழக வீரர் நடராஜன்
Dec 2 2020 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய வீரர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தமிழக வீரர் நடராஜன் முத்திரை பதித்துள்ளார்.
கேன்பராவில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன், தனது முதல் சர்வதேச போட்டியில் தடம் பதித்துள்ளார்.
இதனிடையே, 303 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் லபுசானேவின் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது எண்ணிக்கை தொடங்கியுள்ளார்.