ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழக வீரர் நடராஜன் அபாரம்
Dec 2 2020 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
கேன்பராவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்களுடனும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் லபுசாங்கே 7 ரன்கள் எடுத்த நிலையில், தமிழக வீரர் நடராஜனின் பந்தில் அவுட் ஆகினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில், நடராஜன் முதல் விக்கெட் இதுவாகும்.
இதனையடுத்து நிதானமாக ஆடிய கேப்டன் Finch 75 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய Maxwell 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியுற்றது. இந்திய தரப்பில் Thakur 3 விக்கெட்டுகளையும், நடராஜன் மற்றும் Bumrah தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.