இந்தியா - ஆஸி., மோதும் முதலாவது டி-20 போட்டி : கான்பெராவில் நாளை பிற்பகல் ஆட்டம் தொடங்குகிறது
Dec 3 2020 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, கான்பெராவில் நாளை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி, கான்பெராவில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்று நாற்பது மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இளம் வீரர்கள், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளனர். ஒருநாள் தொடரின் தோல்வியிலிருந்து மீண்டு புதிய உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க இரண்டு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.