மழை நின்றதால் சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடக்கம் - ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து பேட்டிங்
Jan 7 2021 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
.சிட்னி நகரில் மழை நின்றதால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை பெற்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இதில் களமிறங்கினார். ஆனால் அவர் தனது விக்கெட்டை விரைவில் இழந்தார். அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்களாக இருந்தபோது மழை பெய்ததால், உணவு இடைவெளி வரை போட்டி தடைப்பட்டது. அதன் பிறகும் காலநிலை மோசமாக இருந்ததால் போட்டி தொடர்ந்து பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. 16 ஓவர்கள் முடிந்தபோது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.