இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா - பரிசோதனையில் தொற்று உறுதி
Jan 12 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சில வாரங்களுக்கு முன்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காங் சென்றுள்ள சாய்னா நேவாலுக்கு போட்டிக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. சாய்னாவைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான Prannoyக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.