தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் விளையாட அனுமதி - கொரோனா பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிப்பு
Jan 13 2021 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளதை அடுத்து, தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வரும் 17-ம் தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அனுராக் காஷ்யப், எச்.எஸ்.பிரனாய், கிடம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஸ்வினி பொன்னப்பா, சவுரப் வர்மா, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா நேவால், எச்.எஸ்.பிரனாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தாய்லாந்து ஓபன் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாய்னா நேவால், பினராய் ஆகியோருக்கு இன்று முதற்கட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.