ஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்க திணறும் இந்திய அணி - அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாற்றம்
Jan 17 2021 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிஸ்பனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுடனான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தப் போட்டியின் 3ம் நாளான இன்று 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த புஜாரா 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் ரஹானேயும் 37 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், மறுமுனையில் மயங்க் அகர்வால் கவனமுடன் விளையாடி ரன்களை சேர்த்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவரும் மேற்கொண்டு ரன் எடுக்காமல் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த்தும் வெளியேறியதால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. சற்று முன்வரை இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.