சென்னையில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எ‌திரான முதலிரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

Jan 23 2021 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா தொற்றுக்குப்பின் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். மத்திய அரசு திறந்தவெளி மைதானங்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று முன்தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக கிரிக்கெட் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00