மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி - மாணவர்கள் ஆர்வம்
Feb 23 2021 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை எல்.பி நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் வீரபாண்டியர்கள் சிலம்பாட்ட பள்ளி சார்பில் மாவட்ட அளவில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலம்பம், சுருள் வாள், ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.