இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நாளை தொடக்கம்
Feb 23 2021 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, அகமதாபாத்தின் Motera மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக நாளை தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான Motera மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்தப் போட்டி நாளை பிற்பகல் 2 முப்பது மணிக்கு தொடங்க உள்ளது. Motera மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர முடியும். எனினும், கொரோனா அச்சம் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற இரண்டு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.