இங்கிலாந்து- இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி நிதான ஆட்டம்
Feb 25 2021 7:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்ட நாள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகலிறவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் சுப்மன் கில் ஏமாற்றம் அளித்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா, விராத் கோலி ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் ரகானே ஒரு ரன்னிலுல் களத்தில் உள்ளனர்.