தேசிய அளவில் நடைப்பெற்ற மிக்ஸ்டு மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டி - ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி
Feb 26 2021 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவில் நடைப்பெற்ற மிக்ஸ்டு மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய அளவிலான மிக்ஸ்டு மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் 22 மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 5 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் அதோடு சேர்த்து ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர். இந்தியாவில் தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த தற்காப்பு கலையை ஊக்குவிப்பதற்கு அரசு சார்பில் உதவிபுரிய முன்வர வேண்டும் என வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.