தூத்துக்குடியில் 2 மணி நேரத்தில் 20 கி.மீ தூரம் ஓடி 5-ம் வகுப்பு மாணவி சாதனை
Feb 28 2021 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், இரண்டு மணி நேரத்தில் 20 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் மாணவி சொர்ணா, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, ஓட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். சோதனை முயற்சியாக, 2 மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.