திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி - தமிழகத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Mar 1 2021 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான குடோ கராத்தே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 550 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 வயது முதல் 50 வரை, சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் பிரிவுகளில், எடை அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.