ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி தொடக்கம்
Mar 1 2021 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், அப்துல்கலாம் நினைவாக, மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. ஆப்பநாடு விளையாட்டு கழகம் சார்பில், இரவு பகல் ஆட்டமாக 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை, முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. முருகன் தொடக்கி வைத்தார். தமிழக போலீஸ் அணி உள்ளிட்ட 16 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 2-வது பரிசாக 60 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட 8 பரிசுகளும், சுழல் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.