இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Mar 29 2021 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் நடைபெற்ற வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றது. மேலும், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றியது.