கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானுக்கு கொரோனா உறுதி
Mar 30 2021 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நிலையில், பரிசோதனை மேற்கொண்டபோது, கொரோனா இருப்பது தெரியவந்ததாகவும், அதனால், தான் வீட்டிலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலங்களில் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள், தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இர்ஃபான் பதான், பொதுமக்கள் அனைவரும் வெளியில் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து, நல்ல உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.