14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம் - ஐ.பி.எல் தொடர் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Apr 8 2021 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 14-வது ஐ.பி.எல் போட்டிகள் நாளைதொடங்கி மே 30-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவு பெற இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடர் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், அமகதாபாத், டெல்லி ஆகிய 6 மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி தொடராக கூட இருக்கலாம் என்பதால் சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முயற்சிகள் செய்யும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.