கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சச்சின் டெண்டுல்கர்
Apr 9 2021 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். அதன்பின் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கடந்த 2-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.