ஐ.பி.எல். 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி: 7 விக்கெட் வித்தியாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது
Apr 11 2021 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளான நேற்று, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றியும், ருதுராஜும் 5 ரன்களில் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுரேஷ் ரெய்னா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி ரன் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். இறுதியில் சென்னை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது.
189 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய டெல்லி அணியில், பிருத்வி ஷா - ஷிகா் தவன் கூட்டணி அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கே 138 ரன்கள் சோ்த்தது. பிருத்வி 72 ரன்களிலும், தவன் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷாப் பண்ட் 15ரன்களும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.