சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு முதல்முறையாக அங்கீகாரம் - பாரம்பரிய தற்காப்பு கலைக்கு கிடைத்த கௌரவம் என வீரர்கள் பெருமிதம்
Apr 19 2021 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான சிலம்பத்துக்கு மத்திய அரசு முதல்முறையாக தேசிய விளையாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான சிலம்பம் கிராமங்கள்தோறும் இன்றும் இளைஞர்களால் விளையாடப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த விளையாட்டை தேசிய அளவிலான போட்டிகளில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்ததால் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு தற்போது முதல்முறையாக தேசிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் இனி வரும்காலங்களில் தெற்காசிய போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் சிலம்பம் விளையாட்டு இடம்பெறுமென சிலம்பம் பெடரேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.