சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
May 2 2021 9:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 27-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். அதிகப்பட்சமாக அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 72 ரன்களும் குவித்தார். மும்பை தரப்பில் அந்த அணியின் பொலார்ட் அதிகட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பொலார்ட், 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து, இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் சாம் கரன் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.