ஐ.பி.எல். வீரர்களுக்கு கொரோனா தொற்றியதைக் கூறுவது கடினம் - சவ்ரவ் கங்குலி
May 7 2021 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். வீரர்களுக்கு கொரோனா எவ்வாறு தொற்றியது என்பதைக் கூறுவது கடினம் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் திரு. சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடத்த முயன்றது தவறான முடிவல்ல என்றும், ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே, நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஐ.பி.எல். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு சிலரிடம் இருந்து ஆதரவும் வரும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்தியிருக்கலாம் என கருத்துகள் வருவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.