மழைக்காரணமாக ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆட்டம் நடைபெறாது என பிசிசிஐ அறிவிப்பு
Jun 18 2021 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மழைக்காரணமாக ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆட்டம் நடைபெறாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் களம்காணுகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுதாம்படன் மைதானத்தில் போட்டி இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த சூழலில், போட்டி நடைபெறும் சவுதாம்படன் நகரில் மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், மழைக்காரணமாக ஐ.சி.சி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆட்டம் இருக்காது என பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இதனிடையே சவுதாம்படன் நகரில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்குமென அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.