டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிலீக் போட்டி - இந்திய அணி வெற்றி
Jul 31 2021 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி போட்டியில், 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, 3 லீக் போட்டிகளில் தோல்வியடைந்து, 4-வது போட்டியில் நேற்று அயர்லாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை, இந்திய அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்ட நேர முடிவில் 3-க்கு 3 என போட்டி டிராவில் முடிவடைந்தது. இதில் இந்தியாவின் வேதாந்தா கடாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திய நேஹா அற்புதமாக கோல் அடித்து அடித்து, அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியில், தென்ஆப்பிரிக்காவை 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.