டோக்கியோ ஒலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வி
Jul 31 2021 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 மீட்டர் Rifle பிரிவு துப்பாக்கிச்சூடும் போட்டி இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், இந்தியா சார்பில் அஞ்சும் மவுட்கில் மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஞ்சும் மவுட்கில் 15-வது இடத்தையும், தேஜஸ்வினி சாவந்த் 33-வது இடத்தையும் பிடித்து தோல்வியடைந்தனர். இதன் காரணமாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலின் பல்வேறு பிரிவுகளில் இந்தியா தொடர் தோல்விகளையே சந்தித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.