இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் அஸ்வின்
Sep 9 2021 6:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையின் கீழ் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணி தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.