ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு
Sep 9 2021 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மதுரை வீராங்கனை ரேவதிக்கு ரயில்வேத்துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வீரமணி ரேவதி, அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்நிலையில் ரேவதியை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் பணியாற்றி வரும் ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர் நல ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலைகோட்ட ஊழியர் நல அதிகாரி ச.சுதாகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.