டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட தோனி ஒப்புதல்
Sep 9 2021 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, ஆலோசகராக செயல்பட மகேந்திர சிங் தோனி ஒப்புக் கொண்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரசு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயல்பட முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வேண்டுகோள் விடுத்தார். வேண்டுகோளை ஏற்று, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மட்டும் ஆலோசகராக செயல்பட, மகேந்திர சிங் தோனி ஒப்புக்கொண்டுள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். தோனி தலைமையில், 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை கைப்பற்றிய அனுபவம் அவரிடம் உள்ளதால், வரும் தொடரில் தோனியின் ஆலோசனை தேவைப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.