கொரோனா தொற்று அச்சத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் கிரிக்கெட் ரத்து - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Sep 10 2021 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையே மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்கவிருந் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, 4 டெஸ்ட்டுகளில் விளையாடி முடித்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்கவுள்ளது. ஆனால் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்திய வீரர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்க உள்ள போட்டியை மேலும் சில தினங்களுக்கு ஒத்தி வைக்குமாறு இந்திய கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வீரர்கள் கடிதம் எழுதினர். இதன் தொடர்ச்சியாக இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்த போட்டி மற்றொரு தேதியில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.