மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி - மதுரை அணி வெற்றி
Sep 13 2021 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியக மைதானத்தில் மாவட்டத்திற்கு இடையேயான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற சிட்டிங் வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் பரிசை மதுரை அணியும், இரண்டாவது பரிசை மேலூர் அணியும், விருதுநகர் அணி மூன்றாவது பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜேசிஐ மதுரை சென்ட்ரல் மற்றும் எஸ்விஎஸ் நிறுவனம் சார்பில் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.