வேலூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமியிடம் அத்துமீறல் - கராத்தே மாஸ்டர் கைது
Sep 14 2021 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டத்தில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 11 வயது சிறுமி, ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹயாஸ்அகமது என்பவரிடம் கராத்தே கற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது பாலியல் தொந்தரவு கொடுத்து அத்துமீறியதாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கராத்தே மாஸ்டரை கைது செய்தனர்.