ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் IPL கிரிக்கெட் போட்டிகளைக் பார்வையிட அனுமதி - கொரோனா விதிமுறைகளை ரசிகர்கள் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தல்
Sep 16 2021 7:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் காண அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்று வந்த ஐ.பி.எல். 14-வது தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களமிறங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.