பாகிஸ்தானுடனான தோல்வியால் துவண்டுவிடவில்லை என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கருத்து - தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்றும் நம்பிக்கை
Oct 25 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியால் துவண்டு போகமாட்டோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களை கட்டுப்படுத்திவிட்டனர் எனவும் தெரிவித்தார். இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதே முக்கியம் என குறிப்பிட்ட விராட் கோலி, இது முடிவு அல்ல என்றும் உலகம் ஒரே நாளில் முடிந்துவிடாது என்றும் தெரிவித்தார். மேலும், 20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு விராத் கோலி அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.