கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டி : 5 தங்கம், 2 வெண்கலம் வென்ற திருப்பூரை சேர்ந்த வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு

Oct 26 2021 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய அளவிலான தடகள போட்டியில் 5 தங்கம், 2 ​வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்‍கங்களை வென்று திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்‍கு திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்​பு அளிக்‍கப்பட்டது.

கோவாவில் 3 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக திருப்பூர் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் தியாசஞ்சு தங்க பதக்கமும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பிரசாந்த் குமரன் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கமும், வென்றனர். நீளம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் முறையே சந்திரா ஆதித்யா, காதர் அலி ஆகியோர் தங்க பதக்‍கம் ​பெற்றனர்.

ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் எகேந்திரன் வெண்கல பதக்கமும், 400மீட்டர் ஓட்டத்தில் சபரி சுகாஷ் வெண்கல பதக்கமும் வென்றனர். இத்துடன் இவர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றுள்ளனர். கோவாவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கம் வென்று திரும்பிய வீரர், வீராங்கனைகளை திருப்பூர் ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00