நாகர்கோவிலில் 17-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி : பல மாநிலங்களில் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Oct 26 2021 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.
எஸ்.கே.ஐ.எஃப் இந்தியா சம்மேளனத்தின் 17-வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நாகர்கோவிலில் 2 நாட்கள் நடைபெற்றன. தமிழகம், கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கட்டா, குமித்தே, குழு போட்டிகள் என 54 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் தங்கப் பதக்கங்கள் பெறும் வீரர்-வீராங்கனைகள், தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.