உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் : கராத்தே ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு
Nov 23 2021 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவராக தேர்வு செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த கராத்தே நடுவருக்கு கராத்தே வீரர்கள், கராத்தே ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
உலக கராத்தே சம்மேளனத்தின் சார்பில் துபாயில் கடந்த 16-ம் தேதி முதல் 21-ம்தேதி வரை நடுவர் குழு தேர்வு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் கராத்தே சம்மேளனத்தில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ள 178 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற நிலையில் 2015-ம் ஆண்டிலிருந்து உலக கராத்தே நடுவராக செயல்பட்டுவந்த திருச்சியைச் சேர்ந்த காளீசன் இளஞ்செழியன் உலக கராத்தே சம்மேளன நடுவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில் 18 பேர் கொண்ட குழுவினரால் தேர்வுசெய்யப்பட்டு அவருக்கு சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது.