இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்த விவகாரம் : உண்மைக்கு புறம்பான செய்தி - பிசிசிஐ விளக்கம்
Nov 24 2021 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக்கூடாது என்றும், அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பின. இதனிடையே இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.