கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - நெருக்கடியை சமாளித்து அரை சதம் அடித்தார் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் அய்யர்
Nov 28 2021 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ரன்களை குவிக்க தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணி 296 ரன்களில் சுருண்டது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 68 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை விரைவில் இழந்தது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின், சாஹா ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். 59 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.