டிராவை நோக்கி செல்கிறது கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய பந்து வீச்சை சமாளித்து விளையாடும் நியூசிலாந்து வீரர்கள்
Nov 29 2021 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்களும் நிூ நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்ததால், 284 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. இன்று நண்பகல் வரை அந்த அணி விக்கெட்டுகளை இழக்காமல் கவனமுடன் விளையாடியது. சற்று முன் அந்த அணி 2வது விக்கெட்டை இழந்த நிலையில், தொடர்ந்து நிதானமுடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அதேநேரம் இந்திய அணியும் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கனியை பறிக்க போராடுகிறது. இதனால் இந்த ஆட்டம் தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது.