மாநில அளவிலான கபடிப் போட்டி தொடக்கம்
Jan 10 2022 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மாநில அளவிலான கபடி போட்டி தொடங்கியது. லாஸ்பேட் தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டியை சபாநாயகர் திரு.செல்வம், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இருந்து கபடி வீரர்கள் இதில் கலந்துகொண்டனர். முதலிடம் பெறும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.