தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட்
Jan 12 2022 8:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தனது முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி, கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் 12 ரன்களிலும், மயங்க் அகர்வால் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் புஜாரா, கோலி ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தனர். இந்திய அணி 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தென் ஆப்ரிக்கா அணி விளையாடியது. அந்த அணியின் கேப்டன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி, 8 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவை விட 206 ரன்கள் பின்தங்கி விளையாடி வருகிறது.