தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - 2-வது இன்னிங்சில் இந்திய அணி 70 ரன்கள் முன்னிலை
Jan 13 2022 7:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் உள்ளது.
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி முதல் ஆட்ட நேர முடிவில் கேப்டன் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருந்து தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்களிலும், கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.